நிலவைப் பற்றி சமீபத்தில் கண்டறிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறது 'நாசா'.
இன்று இரவு இந்திய நேரப்படி 11:30க்கு(2:00 PM EDT) ஊடகங்களைச் சந்திக்கவிருக்கும் நாசா விஞ்ஞானிகள், நிலவைப் பற்றி கடந்த சில மாதங்களில் கண்டறிந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இதில் 'சந்திராயன்-1' ன் ஒரு பகுதியாக இருந்த Moon Mineralogy Mapper (M3) என்ற இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் கண்டறிந்த தகவல்களும் அடங்கும்.
M3 என்பது கடந்த அக்டோபர் 22 (2008)ல் இந்தியாவால் துவக்கப்பட்ட 'சந்திராயன்-1' திட்டத்தின் ஒரு பகுதியாக 'நாசா'வின் தயாரிப்பு. இது நிலவிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சின் 430 முதல் 3000 நேனோ மீட்டர் வரையிலான அலைவீச்சுகளைக் கொண்டு படம்பிடித்தது. கதிர்வீச்சின் இந்தப் பகுதியானது நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இலகுவாகக் கண்டறிய உதவும் என்கிறார்கள். இவ்வாறு, நாசா விஞ்ஞானிகள் Moon Mineralogy Mapper மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிலவைப் படம் பிடித்துள்ளார்கள். எனவே இன்று நடைபெறும் ஊடக சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
Comments
0 comments to "நிலவில் தண்ணீர் இருக்கலாம்?!"
கருத்துரையிடுக