25 செப்., 2009

'நிலவில் தண்ணீர்' கண்டுபிடித்தது சந்திராயனா?! மேலும், அமெரிக்கர்கள் நாணயமானவர்கள்!



சந்திராயன்-1 ல் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா'வின் Moon Mineralogy Mapper எனப்படும் கருவி, நிலவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் தகவல்களை சேகரித்துள்ளது.

முந்தைய இடுகையில் கூறியது போல, இந்த M3 ஆனது நிலவிலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்வீச்சினை வைத்து நிலவைப் படம் பிடித்தது. ஒரு பொருளின் புறப்பறப்பிலிருந்து பெறப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சு அந்தப் பொருளில் (ஒட்டிக்கொண்டு) இருக்கும் வெவ்வேறு பொருட்களைப் பொருத்து மாறுபடும். அதாவது இரும்புத்துகள்கள் இருக்கும்போது கிடைக்கும் கதிர்வீச்சும், தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும்போது கிடைக்கும் கதிர்வீச்சும் வித்தியாசப்படும். இதை வைத்து ஆராயும்போது M3 கண்டுபிடித்தது பின்வருமாறு, "நிலவிலிருந்து பெறப்பட்ட கதிர்வீச்சில் சில அலைநீளங்களைக் காணோம். இந்த அலைநீளங்கள் 'தண்ணீர்' மற்றும் 'ஹைட்ராக்ஸில்' மூலக்கூறுகளால் உறிஞ்சிக்கொள்ளப்படுபவை".

எனவே நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யலாம்.

தண்ணீர் மூலக்கூறு - H2O
ஹைட்ராக்ஸில் மூலக்கூறு - HO (ஒரு ஹைட்ரஜன் + ஒரு ஆக்ஸிஜன்).

M3 மூலம் பெறப்பட்ட தகவல்களில் உருவான படங்களில் ஒருசில...






"அமெரிக்கர்கள் நாணயமானவர்கள்" - பின்னே, அவர்களது ஒவ்வொரு படங்களிலும் Chandrayan -1 யும் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். நாம்தான், 70 - 80 சதவீதம் இன்னொருவர் தொழில்நுட்பத்தை வைத்தே எதையும் செய்தாலும் 'நான்தான் செஞ்சேன், நான்தான் செஞ்சேன்' னு அலப்பறை குடுக்கிறது. உதாரணம் சமீபத்தில் 'நாங்களே செஞ்சது'ன்னு சொன்ன 'அரிகன்ட்' (Arihant) நீர்மூழ்கிக் கப்பல்.

சில ஊடகங்கள் சந்திராயன் - 1 தான் நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்ததாக தெரியாமல் உளரிக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சந்திராயன் - 1 ல் இருந்த அமெரிக்க கருவிதான் மேற்கண்ட ஆராய்ச்சிகளைச் செய்தது என்பதை மறவாதீர்கள்.

0 மறுமொழிகள்

24 செப்., 2009

நிலவில் தண்ணீர் இருக்கலாம்?!



நிலவைப் பற்றி சமீபத்தில் கண்டறிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறது 'நாசா'.

இன்று இரவு இந்திய நேரப்படி 11:30க்கு(2:00 PM EDT) ஊடகங்களைச் சந்திக்கவிருக்கும் நாசா விஞ்ஞானிகள், நிலவைப் பற்றி கடந்த சில மாதங்களில் கண்டறிந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இதில் 'சந்திராயன்-1' ன் ஒரு பகுதியாக இருந்த Moon Mineralogy Mapper (M3) என்ற இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் கண்டறிந்த தகவல்களும் அடங்கும்.

M3 என்பது கடந்த அக்டோபர் 22 (2008)ல் இந்தியாவால் துவக்கப்பட்ட 'சந்திராயன்-1' திட்டத்தின் ஒரு பகுதியாக 'நாசா'வின் தயாரிப்பு. இது நிலவிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சின் 430 முதல் 3000 நேனோ மீட்டர் வரையிலான அலைவீச்சுகளைக் கொண்டு படம்பிடித்தது. கதிர்வீச்சின் இந்தப் பகுதியானது நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இலகுவாகக் கண்டறிய உதவும் என்கிறார்கள். இவ்வாறு, நாசா விஞ்ஞானிகள் Moon Mineralogy Mapper மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிலவைப் படம் பிடித்துள்ளார்கள். எனவே இன்று நடைபெறும் ஊடக சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்காகப் பயன்படுத்திய கருவியினைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்கவும்.

இந்த சந்திப்பின் நேரடி ஒளிபரப்பினை இங்கே பார்க்கலாம்.
0 மறுமொழிகள்
 

(C)ஊர்சுற்றி Content Rights reserved. Do not republish without the Author's permission.
Theme Revolution Two Church theme Source Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com Gorgeous Beaches of Goa